இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது மேற்கூரையில் சிக்கித்தவித்த கைக்குழந்தையின் மீட்பு முதல் வெள்ளியங்கிரியில் மீண்டும் ஏற்பட்ட உயிரிழப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
அரியலூரில் விபத்தை தடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள். மோதிய வேகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக 11 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.