இருவர் பலி! தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் என்னென்ன? கள நிலவரம் குறித்து தேர்தல் அதிகாரி கூறியது என்ன?

”தேர்தல் நேரத்தை நீட்டிக்க வாய்ப்புகள் இல்லை இருப்பினும் கடைசி வாக்காளார் வரை வாக்குச்சாவடி செயல்படும் “ தேர்தல் அதிகாரி
வாக்குச்சாவடி
வாக்குச்சாவடிPT

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், சேலத்தில் அதிக வெயில் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்களிடம்,

வெயிலால் வாக்காளார்கள் இருவர் உயிரிழந்து இருக்கிறார்கள் வாக்காளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சத்யபிரதா சாஹூ, “இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது . விசாரணை நடைப்பெற்று வருகிறது.” என்றார்.

இந்த வெப்ப அலை காரணமாக மாலை 6 மணி ஓட்டுப்போடலாம் என்பதை நேரம் நீட்டிக்கப்படுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லை, இருப்பினும் கடைசி வாக்காளர்கள் ஓட்டு அளிக்கும் வரை வாக்குச்சாவடி செயல்படும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com