who is david szalay the 2025 booker prize winner
david szalaybooker prize

புக்கர் பரிசு 2025 | தட்டிச் சென்ற ஹங்கேரிய-பிரிட்டிஷ் எழுத்தாளர்.. யார் இந்த டேவிட் ஸ்ஸாலே?

நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசு, ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் ஸ்ஸாலேயின் Flesh நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Published on
Summary

நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசு, ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் ஸ்ஸாலேயின் Flesh நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹங்கேரிய-பிரிட்டிஷ் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில், அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

who is david szalay the 2025 booker prize winner
6 novelsbooker prize

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசு, ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் ஸ்ஸாலேயின் ’Flesh’ நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு வெல்லும் முதல் ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் இவரே. டேவிட் ஸ்ஸாலேயின் ஹிப்னாடிக் நாவலான ஃபிளெஷ், தனது சொந்த ஆசைகளால் அழிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றியது. முன்னதாக, செப்டம்பரில் வெளியிடப்பட்ட 6 புத்தகங்களின் குறுகிய பட்டியலில், 2006ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற கிரண் தேசாய், சுசான் சோய், கேட்டி கிதமுரா, பென் மார்கோவிட்ஸ், ஆண்ட்ரூ மில்லர், டேவிட் ஸ்ஸாலே ஆகியோரின் நாவல்கள் இடம்பிடித்திருந்தன. இந்த நிலையில்தான் நடப்பாண்டுக்கான புக்கர் பரிசை டேவிட் ஸ்ஸாலே வென்றுள்ளார். இதன்மூலம், அவருக்கு பரிசுக் கோப்பையுடன் 58 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 51 வயதான டேவிட் ஸ்ஸாலேய் இதற்குமுன்பு 2016ஆம் ஆண்டில் 'All That Man Is' என்ற புத்தகத்துக்காக புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

who is david szalay the 2025 booker prize winner
புக்கர் பரிசு 2025 | 6 நாவல்களின் பட்டியல் வெளியீடு.. மீண்டும் இடம்பிடித்த கிரண் தேசாய்!

யார் இந்த டேவிட் ஸ்ஸாலே?

கனடாவில் பிறந்த டேவிட், லண்டனில் வளர்ந்தவர் ஆவார். ஆனால் தற்போது வியன்னாவில் வசிக்கிறார். இந்த வாழ்க்கை அவரது படைப்புகளில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது பெரும்பாலும் இடப்பெயர்ச்சி, அடையாளம் மற்றும் வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்திருப்பதற்கான தேடல் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்கிறது. ஹங்கேரிய வீட்டுத் தோட்டத்திலிருந்து லண்டனின் உயரடுக்கின் மாளிகைகள் வரை நீண்டுள்ள அவரது வெற்றி பெற்ற நாவலான ஃபிளெஷ், இந்த நாடுகடந்த கண்ணோட்டத்திற்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டாக உள்ளது.

who is david szalay the 2025 booker prize winner
david szalaybooker prize

புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும். பின்னர் அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார்.

ஹங்கேரியால் பிணைக்கப்பட்ட இரண்டு எழுத்தாளர்கள், இந்த ஆண்டுக்கான இலக்கியத்தின் மிக உயர்ந்த பரிசுகளை வென்றுள்ளனர். லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நோபல் பரிசையும் டேவிட் சலாய் நவீன புக்கர் பரிசையும் வென்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்க்கு நோபல் விருது வழங்கப்படுவதாக தேர்வுக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

who is david szalay the 2025 booker prize winner
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்.. யார் இந்த பானு முஷ்டாக்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com