இந்தோனேசியா - நிலநடுக்கத்தை தொடர்ந்து எரிமலை வெடிப்பு...!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வடக்கு சுலவெசி மாகாணத்தில் இருக்கும் ருயாங் தீவில் எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியது.

புதிய தலைமுறை
எரிமலை வெடிப்புஇந்தோனேசியா

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியா
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com