
இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளனர். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள் அனைவருக்கும் கோழி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு, கோழிகளை வாங்கிச் சென்றனர்.