நாகினி நடிகையின் சகோதரி கொடூர கொலை... இஸ்ரேல் - ஹமாஸ் போரின் கொடூரம் தொடர்பாக பரபரப்பு வீடியோ!

“இஸ்ரேலில் ஹமாஸ் போரில் என்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவரை இழந்து நிற்கிறோம். அவர்களின் குழந்தைகளுடைய கண்முன்னேயே இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்” நடிகை மதுரா நாயக்

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Madhura Naik and her sister family
அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது... இன்று காஸாவில் நிகழ்கிறது..!

இந்நிலையில் இந்திய நடிகை ஒருவரும் தனது குடும்பத்தினரை இஸ்ரேல் ஹமாஸ் போரில் பறிகொடுத்துள்ளார்.

நடிகை மதுரா நாயக் - அவரது சகோதரியின் குடும்பம்
நடிகை மதுரா நாயக் - அவரது சகோதரியின் குடும்பம்

நாகினி தொடரில் நடித்தவர், நடிகை மதுரா நாயக். இவரது சகோதரி மற்றும் அவரது கணவர், இஸ்ரேலில் ஹமாஸ் போரில் கொல்லப்பட்டுள்ளதாக வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். இது பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.

நாகினி சீரியல் நடிகை மதுரா நாயக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "இஸ்ரேலில் ஹமாஸ் போரில் என்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவரை இழந்து நிற்கிறோம். அவர்களின் குழந்தைகளுடைய கண்முன்னேயே இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தின் மிகக் கொடுமையான உணர்வுகளை எங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்போது இஸ்ரேல் மிகக் கடுமையான வலி மிகுந்த நேரத்தில் உள்ளது. ஹமாஸின் கொடுஞ்செயலால், இஸ்ரேலின் குழந்தைகள், மகள்கள் கொல்லப்படுகின்றனர். தெருக்கள் எல்லாம் பற்றி எரிகின்றன.

குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன். வன்முறையை எந்த வகையிலும் எந்தப் பக்கத்திலும் நான் ஆதரிக்க மாட்டேன். இந்த மோசமான நேரத்தில் நீங்கள் இஸ்ரேல் மக்கள் பக்கம் நில்லுங்கள். தீவிரவாதிகளின் கொடூரமான, மனிதாபிமானமற்ற முகத்தை மக்கள் பார்க்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com