டிவிட்டரில் இணைந்தார் மலாலா

டிவிட்டரில் இணைந்தார் மலாலா

டிவிட்டரில் இணைந்தார் மலாலா
Published on

பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், லண்டனில் வசித்து வருகிறார். இப்போது டிவிட்டரில் இணைந்துள்ளார். இணைந்த சில மணி நேரங்களிலேயே, 3 லட்சத்துக்கு 40 ஆயிரம் பாலோயர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். 
’இன்று (நேற்று) எனது பள்ளிப் படிப்பின் கடைசி நாள். டிவிட்டரில் முதல் நாள். பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதாக வருத்தம் இருந்தாலும், எதிர்காலம் நினைத்து மகிழ்ச்சிகொள்கிறேன். லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழலில் இருக்கின்றனர். அடுத்த வாரம் முதல், மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா சென்று, அங்குள்ள பெண்களைச் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 
அவருக்கு டிவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com