உணவில் உப்புசேர்க்க மறந்துவிட்டீர்களா?அப்போ கவலை வேண்டாம்... உங்களுக்காகவே இந்த புது மெஷின்!

உணவில் உப்பு சேர்க்காமல், நாக்கிற்கு உப்பின் சுவையை கொடுக்கும் வகையில் மின்சார ஸ்பூனை அறிமுகம் செய்துள்ளது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று.
ஜப்பான்
ஜப்பான்Facebook

உணவில் உப்பு சேர்க்காமல், நாக்கிற்கு உப்பின் சுவையை கொடுக்கும் வகையில் மின்சார ஸ்பூனை அறிமுகம் செய்துள்ளது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

சமையல் கலையை பொறுத்தவரை உப்பு, காரம் சரியாக சேர்ந்துவிட்டால் போதும், அப்பப்பா! நானும் ஒரு சமையல் காரர்தான் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால், சரியாக சேர்ப்பதில்தான் இருக்கிறது சுவாரஸ்யமே!.

இந்திய மருத்துவ கவுன்சிலின் சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, ஒரு நாளைக்கான உப்பு உட்கொள்ளுதல் அளவு என்பது 5 கிராமுக்கு மேல் போகக்கூடாது (சோடியம் ஒரு நாளைக்கு 2 கிராமுக்கு மேல் போகக்கூடாது) என்று தெரிவித்துள்ளது. உணவில் உப்பின் அளவு குறைந்தால் சுவையும் போய்விடும். அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை, பக்கவாதம் போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். இப்படி உப்பினால் எழும் பிரச்னைகள் ஏராளம்.

ஆனால், இந்த கவலைகெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே புது கண்டிபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர் ஜப்பானியர்கள். புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு பெயர்போன ஜப்பானியர்கள், இம்முறை எலெட்க்ரிக் ஸ்பூன் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தியுள்ளனர்.

இந்த பிரேத்யேக ஸ்பூனை கண்டுபிடித்துள்ளது ஜப்பானின் பானங்கள் தயாரிக்கும் நிறுவனமான, கிரின் என்ற நிறுவனம். இந்த ஸ்பூனில் உணவை எடுத்து, நாவில் வைக்கும்போது, நாவில் சிறிய அளவு மின்னூட்டம் பாய்ச்சப்பட்டு அதன் மூலம் நாக்கில் உள்ள சுவை அரும்புகளில் உள்ள சோடியம் அயனிகள் செறிவூட்டப்பட்டு, நாக்கிற்கு ஏற்றார்போல உப்பு சுவை கிடைத்து விடும். இதனால், உணவில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு முறையை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

ஜப்பான்
மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்! காத்திருக்கும் பெரிய ஆபத்து!

ஒரு ஸ்பூனின் விலை $127 . அதாவது, இந்திய மதிப்பின்படி, ரூ 10, 500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பூனானது, பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 கிராம் எடை கொண்ட மின்சார ஸ்பூனானது சார்ஜ் செய்து கொள்ளும் வகையில், லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது. முதற்கட்டமாக 200 ஸ்பூன்கள் விற்பனைக்கு வரும் என்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுவித ஆராய்ச்சி படைப்புக்காக கடந்த ஆண்டும் 1g நோபல் பரிசு கிடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் 10 லட்சம் விற்பனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இதனை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிச்சயம் இந்தியாவில் இது விற்பனைக்கு வந்தால் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் ஒன்றுமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com