இம்ரான் கான்
இம்ரான் கான்முகநூல்

ஊழல் வழக்கு... இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவர் மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் - புஷ்ரா பீவி
இம்ரான் கான் - புஷ்ரா பீவி

இம்ரான் கான் பிரதமராக இருந்த போது சொத்து குறித்த வழக்கு ஒன்றில் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாகிஸ்தான் பணம் அந்நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இப்பணத்தை இம்ரான் கான், அவரது மனைவி உட்பட மொத்தம் 6 பேர் தங்களுக்கு வேண்டிய ஒரு நபருக்கு அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இம்ரான் கான்
ஜல்லிக்கட்டு வீரர்களிடம் சாதி, மதம் விவரம் கேட்கப்பட்டதா? விளக்கமளித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

அல் காதிர் ட்ரஸ்ட் என்ற அந்த வழக்கில் ஊழலுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றம் 3 முறை தீர்ப்பை வழங்க முயன்று தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் தண்டனை (வேறு சில வழக்குகளுக்கான தீர்ப்புகள் உட்பட) அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com