"ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக தோனியை தக்க வைப்போம்" -சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்

"ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக தோனியை தக்க வைப்போம்" -சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்
"ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக தோனியை தக்க வைப்போம்" -சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்

ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணி தக்க வைத்துக்கொள்ளும் முதல் வீரராக மகேந்திர சிங் தோனி இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4ஆவது முறையாக கோப்பையை வென்று தந்துள்ள தோனி அடுத்து வரும் ஆண்டுகளிலும் அந்த அணியில் தொடர்வாரா என கேள்விகள் எழுந்தன.

தோனிக்கு 40 வயது ஆகிவிட்டதாலும் விரைவில் கூடுதலாக 2 அணிகளுடன் மிகப்பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையிலும் இக்கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின்னர் பேசிய தோனி சென்னை அணியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தங்கள் அணியில் தோனி தொடரப்போவதை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அணிகள் தங்கள் தற்போதைய வீரர்கள் எத்தனை பேரை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை என்றும் ஆனால் கப்பலின் மாலுமியையே முதல் ஆளாக தாங்கள் தக்க வைக்க விரும்புவதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தோனி சிஎஸ்கேவில் தொடர்வார் என்பது மேலும் உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com