நெல்லை: மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி

நெல்லை: மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி
நெல்லை: மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி

நெல்லையில் திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை - தெற்கு பஜாரைச் சேர்ந்த பொன்னுதாஸ் என்பவர், திமுகவின் 38 ஆவது வார்டு செயலாளராக இருந்து வந்தார். நேற்றிரவு 11 மணிக்கு அவர் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் பொன்னுதாஸின் வீட்டின் அருகே அவரை அரிவாளால் வெட்டியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் உயிரிழந்தார். கொலையைப் பார்த்த பொன்னுதாஸின் தாயாரின் கூச்சலைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், பாளையங்கோட்டை காவல் துறையினரை வரவழைத்தனர்.

உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ள பொன்னுதாஸின் தாயார், நேர்காணலுக்குத் தயாராகியுள்ளார். பாளையங்கோட்டையில் மதுக்கூடத்தை பொன்னுதாஸ் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், அவரது கொலைக்கு காரணம் தேர்தல் பகையா, தொழில்போட்டியா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com