இன்றைய தலைப்புச் செய்திகள் | ‘நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம்’ முதல் ‘இஸ்ரேல் - காசா போர்’ வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது நிதிநிலை அறிக்கையின் மீது இன்று நடைபெறவிருக்கும் விவாதம் முதல் இஸ்ரேல் - காசா போர் வரை பல தகவல்களை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது இன்று பொது விவாதம் நடைபெறவுள்ளது. 12 மசோதாக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்.

  • வேளாண் பட்ஜெட்டில் பால்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீடு 42,281 கோடி ரூபாயாக அதிகரிப்பு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
🔴LIVE | தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | முக்கிய அம்சங்கள்
  • மண்ணையும், மக்களையும் காப்பது போல அமைந்துள்ளது வேளாண் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

  • விவசாயிகளுக்கு பயன்தராத பட்ஜெட் எனவும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழக அரசுடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

போக்குவரத்து துறை
போக்குவரத்து துறைபுதிய தலைமுறை
  • ‘கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் பெண்களின் மாதந்திர சேமிப்பு ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு; 43 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர்’ - CAG நுகர்வோர் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

  • மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக, அதிமுக முட்டுக்கட்டையாக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

  • அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறு பேச்சு விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்கும் திரை பிரபலங்கள். அருவருக்கத்தக்க வகையில் பேசியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை என த்ரிஷா உறுதி.

  • எனது கருத்தால் மனது புண்பட்டிருந்தால் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ விளக்கம்.

Trisha
Trishatwitter
  • பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமிக்கு மார்ச் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு. மேலும் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், சினேகம் பவுண்டேசன் பெயரில் மோசடி செய்தது உறுதியாகியுள்ளது.

  • சென்னை செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி நிறைவு. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக தகவல்.

  • நாகர்கோவில் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பாறைகள், மாட்டின் மண்டை ஓடுகளை வைத்தவர்கள் குறித்து விசாரணை.

  • மேட்டுப்பாளையம் அருகே 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பில், மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சோகம்.

  • பீகார், ஜார்க்கண்ட்டில் பாரதிய ஜனதா மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய மெகா கருத்துக்கணிப்பில் தகவல்.

  • பீகாரில் நடைபயணத்தை தொடங்கினார் தேஜஸ்வி யாதவ். கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்
  • மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் டெல்லி நோக்கி மீண்டும் படையெடுக்கும் வடமாநில விவசாயிகள்

  • சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி என அறிவித்த உச்சநீதிமன்றம்.

  • “தேர்தல் ஜனநாயகத்தின் செயல் முறையை சூழ்ச்சிகளால் முறியடிக்க அனுமதிக்க முடியாது. இத்தீர்ப்பு பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி” என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருத்து

  • சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து.

  • ராஜஸ்தானில் இருந்து முதன்முறையாக மாநிலங்களவை எம்.பியானார் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • மத்தியப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு சென்றார் இணை அமைச்சர் எல்.முருகன்.

  • டிசம்பர் 31ஆம் தேதி சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளியேறும் வெப்ப கதிர்வீச்சை ஆதித்யா விண்கலம் எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.

  • இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் கோரி ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவந்த அல்ஜீரியா. ஆனால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா.

  • விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
விராட் - அனுஷ்கா தம்பதிக்கு புதுவரவு.. வாமிகாவின் குட்டி தம்பி AKAAY! பெயருக்கு இதுதான் அர்த்தமா!
விராட் கோலி, அனுஷ்கா சர்மா
விராட் கோலி, அனுஷ்கா சர்மாfile image
  • நடப்பாண்டு ஐபிஎல் தொடரை 2 கட்டங்களாக நடத்த திட்டம். மேலும் அடுத்த மாதம் 22ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் என அறிவிப்பு.

  • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் முகேஷ்குமார் அணியில் சேர்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com