தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25புதிய தலைமுறை

🔴LIVE | தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
🔴 LIVE | தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை | அமைச்சர் தங்கம்தென்னரசு உரை - விரிவான முழு தொகுப்பு!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட் 2024 - 25
வேளாண் பட்ஜெட் 2024 - 25

தொடர்ந்து அமைச்சர் “உழவர்களை உச்சத்தில் வைத்த சமூகம் தமிழ்ச் சமூகம். அதனால்தான் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கலாகிறது” எனக்கூறி திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு உரையாற்ற தொடங்கினார். அவரின் உரையை முழுமையாக கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

விவசாய பட்ஜெட் - வேளாண்துறை அமைச்சர் அறிவித்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடு (1)

சாதனைகள்

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.50 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த சாகுபடி 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் | வேளாண் பட்ஜெட் 2024 - 25
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் | வேளாண் பட்ஜெட் 2024 - 25

“தாவிக் குதிக்கும் குழந்தை போன்றது தற்போதைய வேளாண் பட்ஜெட்”

அறிவிப்புகள்...

தாவிக் குதிக்கும் குழந்தை போன்றது தற்போதைய வேளாண் பட்ஜெட்.

2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில், "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" மூலம்,

  1. பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு

  2. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு

  3. 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

  4. உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு

  5. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.

போன்றவை உட்பட மொத்தமாக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு மட்டும் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25

10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட, மண்புழு உரம் ஊக்குவித்தலுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. களர் அமில நிலங்களை சீர்படுத்த, ரூ. 22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை தடுக்க ஏதுவாக கிடங்குகள் அமைப்பு.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெறும் நோக்கில் 2,2482 கிராம ஊராட்சிகளில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

வேளாண் காடுகள் திட்டம் மூலம் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. வேளாண்மைக்கான மாதிரிபண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

#BREAKING | மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் ரூ.206 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
#BREAKING | மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் ரூ.206 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் - 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு. 'துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' ,மூலம் துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு. கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலை
தோட்டக்கலை

சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு. தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு. நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு. புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு. சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

செங்காந்தள்
செங்காந்தள்

செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு. மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு. ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு. பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம். ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர்

இவ்வாறாக பல்வேறு திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்து 2024 - 25 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

பட்ஜெட் உரை மீதான பார்வை... #DIGITALEXCLUSIVE

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com