கருணாநிதியை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்தார் திருமாவளவன்

கருணாநிதியை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்தார் திருமாவளவன்
கருணாநிதியை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்தார் திருமாவளவன்

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியுடன் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். செப்டம்பர் 17ல் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கருணாநிதியிடம் திருமாவளவன் அளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை அன்பழகன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினர். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திம்பினார். அன்பழகன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும் வி.சி கட்சி தலைவர் திருமாவளவனும் நேரில் சந்தித்து மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டியில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளது. வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றும் முடிவை வரவேற்கிறேன் என்று பேட்டியில் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com