ஏப்.3ம் தேதி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து பரப்புரையை தொடங்கும் பிரியங்கா!

ஏப்.3ம் தேதி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து பரப்புரையை தொடங்கும் பிரியங்கா!

ஏப்.3ம் தேதி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து பரப்புரையை தொடங்கும் பிரியங்கா!
Published on

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் இருந்து பிரியங்கா காந்தி பரப்புரையை தொடங்க உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் தேசிய தலைவர்கள், மற்றும் மாநில தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து அவர் பரப்புரையை மேற்கொள்கிறார்.

முன்னதாக, கடந்த மார்ச் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பரப்புரையை தொடங்கவிருந்ததாக தகவல் வெளியானது. பின்னர் தேதி மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com