நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த ஸ்டாலின்: செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்!

நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த ஸ்டாலின்: செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்!

நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த ஸ்டாலின்: செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்!
Published on

கோவை பந்தைய சாலையில் தேர்தல் பிரசாராம் செய்த திமுக தலைவர் ஸ்டாலினுடன் நடைபயிற்சியில் இருந்த பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கோவை சட்டமன்ற தொகுதி நட்சத்திறத்தொகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், திமுக சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் களம் காண்கின்றனர்.

மூன்று பேருமே மக்களுக்கு தெரிந்த முகம் என்பதால் இங்கு மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கோவை பந்தைய சாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டவாரே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிங்காநல்லூர் கார்த்திக் , கோவை தெற்கு மயூரா ஜெயகுமார் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து மு.க ஸ்டாலின் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் நடைபயிற்ச்சி மேற்கொண்டபோது கோவை பொதுமக்கள் செல்போனில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதாக அவரிடம் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com