Chandrayaan-3 திட்டம் வெற்றிபெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம்!

சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
ISRO Scientists
ISRO ScientistsANI | Twitter

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மைல் கல்லாக எதிர்பார்க்கப்படும் சந்திரயான்-3 எனப்படும் நிலவை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ISRO Scientists
சந்திரயான் 3: லேண்டர் மற்றும் ரோவரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை பிற்பகல் 2:35 மணிக்கு மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட உள்ளது.

இந்த நிலையில் இன்று திருப்பதி சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான்-3 விண்கலத்தின் சிறிய மாதிரியுடன் சாமி தரிசனம் செய்தனர். இஸ்ரோ குழுவில் உள்ள சந்திரயான் 3 இயக்குனர்கள் ஏ.கே. பத்ரா, வீரமுத்துவேல், கல்பனா ஆகியோர் இந்த தரிசனத்தை மேற்கொண்டனர்.

ISRO Scientists
Chandrayaan-3 | இந்தியாவின் நிலவு பயணத்தில் மேலும் ஒரு தமிழர்! யார் இந்த விஞ்ஞானி வீர முத்துவேல்?

சந்திராயன் - 3, நிச்சயம் வெற்றியடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com