பாபநாசத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்

பாபநாசத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்
பாபநாசத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்

எரிவாயு சிலிண்டரின் விலையேற்றத்தை கண்டித்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியம் ரத்து, சர்க்கரை விலை உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை  கண்டித்து கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாதர் சங்கத்தினர் எரிவாயு சிலிண்டரை பாடையில் கட்டி சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் சிலிண்டருக்கு மாலையிட்டு அதனை பாடையில் கட்டியதோடு ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

இந்திய பொருளாதாரத்தையும், சிறு குறு தொழில்களையும் சீரழித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சர்க்கரை விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அப்போது மாதர் சங்கத்தினர் முழக்கமிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com