“நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தல்” - பெண் புகார்

“நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தல்” - பெண் புகார்
“நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தல்” - பெண் புகார்

நித்யானந்தா ஆசிரமத்தில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தப்படுவதாக அங்கு தங்கியிருந்த கனடா நாட்டு பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லேண்டரி என்ற பெண் நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நித்யானந்தாவிடமிருந்து விலகி கனடா சென்ற அந்தப் பெண், தற்போது ஆசிரமத்தின் மீது பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனித் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கண்களை கட்டிக்கொண்டு அகக்கண்ணால் படிப்பது, அருள்வாக்கு கூறுவது உள்ளிட்ட பல்வேறு அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்துவது வழக்கம். அவ்வாறு சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தப்படுவதாக ஒரு சிறுமி தம்மிடம் கூறியதாக சாரா லேண்டரி கூறியுள்ளார்.

அடித்து துன்புறுத்தப்படுவதை வெளியில் சொல்வது குரு துரோகம் என குழந்தைகள் மிரட்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார். சிறுவர் சிறுமியருக்கு நடக்கும் கொடுமை குறித்து நித்யானந்தாவின் பிரதான சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம் புகார் தெரிவித்தபோது, அதை மறுத்ததாகவும் கனடா பெண் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com