எந்த பெற்றோருக்கும் நேரக்கூடாத ஒரு தருணத்தை விஜய் ஆண்டனி எதிர்கொண்டிருக்கிறார். துள்ளித் திரிந்து விளையாடி, பேசிச் சிரித்து மகிழ்ந்த தன் மூத்த மகளை அவர் இழந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியின் விபரீத முடிவால் அந்தக் குடும்பம் கலங்கிப் போயிருக்கிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள கடிதத்தில், “என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத அமைதியான ஒரு இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுத்தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என்று மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.