கிராம மக்கள் தர்ணா
கிராம மக்கள் தர்ணாpt desk

வேங்கைவயல் விவகாரம் | குற்றப் பத்திரிகைக்கு எதிராக கிராம மக்கள் தர்ணா

குற்றப் பத்திரிகைக்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

குற்றப் பத்திரிக்கைக்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டிபுதிய தலைமுறை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் என அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் மூன்று பேரை நேற்று சிபிசிஐடி போலீசார் தமிழக அரசு வழக்கறிஞர் மூலம் அறிவித்தனர்.

கிராம மக்கள் தர்ணா
மதுரை | ரீல்ஸ் மோகம் - ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்..!

இதைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்குள்ளும் வெளியேவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வராதபடியும் போராட்டத்தை வீடியோ எடுத்து அனுப்பி விடாத படியும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com