நண்பர்களுடன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி, இருவர் காயம்

நண்பர்களுடன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி, இருவர் காயம்
நண்பர்களுடன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி, இருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தநிலையில், இருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர்கள் 4 பேருடன் திருநெல்வேலி நோக்கி காரில் சென்றுள்ளார். சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பெத்துரெட்டிபட்டி விளக்கில் கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சக்கரவர்த்தி (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் தகவல் அறிந்து வந்த சாத்தூர் காவல்துறையினர் காயம் அடைந்த 3 பேரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் ரேக்ளாண்ட் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த விபத்து குறித்து சாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com