”தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இறந்திருக்கிறார்கள்” - மதுரை ரயில் தீ விபத்து அலட்சியத்தால் ஏற்பட்டதா?

மதுரையில் ஏற்பட்ட ரயில் தீ விபத்து; அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தா? என்பது குறித்து விபத்து தடுப்பு வல்லுநர் பிரபு காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணிகள் சிலர் தேநீர் தயாரிக்க கேஸ் சிலிண்டரை பற்றவைத்த போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து கேட்பதற்காக விபத்து தடுப்பு வல்லுநர் பிரபு காந்தியை புதிய தலைமுறையின் சார்பில் தொடர்பு கொண்டோம். அவர் கூறியவை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com