கும்பகோணம் இளைஞர்கள் கொலை விவகாரம்.. நாட்டு வைத்தியரின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை

கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற ஊரில் இரு இளைஞர்களை கொல்ல நாட்டு வைத்தியர் பயன்படுத்திய ஆயுதங்களை காவல்துறையினர் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
கும்பகோணம்
கும்பகோணம் புதிய தலைமுறை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்ற நாட்டு வைத்தியர் இரு இளைஞர்களை கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள்
குறித்து கேசவமூர்த்தி அளித்த வாக்குமூலத்தை செய்திக்குறிப்பாக காவல்துறை வெளியிட்டுள்ளது.

கும்பகோணம்
கும்பகோணம் | தோண்ட தோண்ட மனித எலும்புகள்... ஒரு கொலையின் விசாரணையில் அம்பலமான பல குற்றங்கள்!
கேசவமூர்த்தி - கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் மற்றும் முகமது அனாஸ்
கேசவமூர்த்தி - கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் மற்றும் முகமது அனாஸ்புதிய தலைமுறை

அதில், “என்னுடன் ஓர்பாலினசேர்க்கை தொடர்பிலிருந்த அசோக் ராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். எனவே ஆத்திரமடைந்து அவரை கொன்றேன். இதேபோல என்னுடன் தொடர்பில் இருந்த முகமது அனாஸ் என்ற இளைஞரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். எனவே கோபத்தில் அவரையும் கொன்றேன்” என்று வைத்தியர் கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கும்பகோணம்
நடிகை வனிதா முகத்தில் பலத்த காயம்... பிரதீப்பின் ஆதரவாளர் எனக்கூறி தாக்குதலா? நடந்தது என்ன?

இருவரையும் கொன்று வீட்டிற்குள்ளேயே அந்த வைத்தியர் புதைத்த நிலையில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆடு வெட்டும் கத்திகள், கட்டர், மருத்துவர்கள் பயன்படுத்தும் பிளேடுகள், கத்திரிக்கோல், கையுறை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்பொருட்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, கேசவமூர்த்தியிடம் தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com