கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்pt desk
தமிழ்நாடு
திருவள்ளூர்| ”சிறுக சிறுக சேர்த்த பணம்” ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்து தலைமறைவான நபர்!
பெரியபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி வரை மோசடி செய்து தலைமறைவான நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ், மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்த ரமேஷிடம் ஒரு லட்சம், 2 லட்சம் என பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்த ரமேஷ் கிராமத்தை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
SP Officept desk
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஏலச்சீட்டு என்பதால் சிறுக சிறுக சேமித்த 2 கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி செய்து தலைமறைவான நபரை தேடி பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.