தமிழகம் முழுவதும் மருத்துவமனை தலைவர்களை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் உத்தரவில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வசந்தாமணி, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி தலைவராக டாக்டர் சங்குமணியும், மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் தலைவராக டாக்டர் ரத்னவேலும், திருப்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியின் தலைவராக டாக்டர் முருகேசனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி தலைவராக டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி தலைவராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி தலைவராக டாக்டர் திருவாசகமணி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.