நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம்
நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம்pt desk

தமிழ் வருடப்பிறப்பு | பழனி முருகன் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்

சித்திரை முதல் நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள். 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம்
புதுக்கோட்டை | தமிழ் வருடப் பிறப்பு - நல்லேர் பூட்டி உழவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்

அதிகப்படியான பக்தர்கள் வருகையால் மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் மலை ஏறவும், இறங்கவும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com