School studentpt desk
தமிழ்நாடு
கோவை: அரசுப் பள்ளியில் சேர்க்க மறுத்த ஆசிரியர்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்த மாணவன்
கோவையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்க்க ஆசிரியர்கள் மறுத்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர்: பிரவீண்
கோவை கீரனத்தம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்ற மாணவன், கோவில்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அதே பள்ளியில் 11ஆம் வகுப்பை தொடர விரும்பிய மாணவன் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அங்குள்ள ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை கூறி பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
School studentpt desk
மாணவன் தனது பெற்றோருடன் சென்று பலமுறை கேட்டபோதிலும் பள்ளியில் சேர்க்க மறுத்த நிலையில், மாணவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் படிப்பை தொடர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தன்னை மீண்டும் அதே பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.