மூச்சு பேச்சின்றி விழுந்தார் ஜெயலலிதா: ஸ்டாலின்

மூச்சு பேச்சின்றி விழுந்தார் ஜெயலலிதா: ஸ்டாலின்

மூச்சு பேச்சின்றி விழுந்தார் ஜெயலலிதா: ஸ்டாலின்
Published on

போயஸ் கார்டன் வீட்டில் கீழே தள்ளி விடப்பட்டதாலேயே ஜெயலலிதாவுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகரில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஆட்டோவில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். நாகூரான் தோட்டம் என்ற பகுதியில் அவர் பேசும்போது, திமுக விரைவில் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார். ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தள்ளிவிடப்பட்டு தலையில் அடிபட்டு பாதிப்புக்கு ஆளாகி மூச்சு பேச்சின்றி கீழே விழுந்தார் என குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com