“தமிழக மக்களுக்கு மோடி அரசு இனியாவது நல்லது செய்யுமா?” - செல்லூர் ராஜூ கேள்வி!

புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் இனியாவது நல்லது செய்வார்களா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. தொடர்ந்து அதிமுக - பாஜகவிற்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி குறித்தும் வெற்றி தோல்வி குறித்தும் பல்வேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ, தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு, இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி எம்.பிக்கள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம்” என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
‘அண்ணன் நான் ரெடிதான் வரவா...’ - மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருக்கும் பரிசு!

செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுலை புகழ்ந்து பதிவிட்டு அதனை கட்சித் தலைமையின் எதிர்ப்பால் டெலிட் செய்த நிலையில், பிரதமர் மோடி அரசு குறித்து விமர்சித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
“நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி”- பதிவை நீக்கினார் செல்லூர் ராஜூ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com