நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமானுடன் மனைவி கயல்விழி வருவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், கயல்விழி இல்லாமல் சீமான் மட்டும் வந்துள்ளார். வழக்கறிஞர் குழுவுடன் வந்த சீமானைக் கண்டதும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். நள்ளிரவு தாண்டியும் விசாரணை நீளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.