\
திருச்சி: 3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி!
திருச்சி: 3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி! முகநூல்

திருச்சி | 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி!

பெரம்பலூர் அருகே எருதுபட்டி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசிலிருந்த திருகாணியை விழுங்கிவிட்டான்
Published on

திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசிலிருந்த திருகாணியை விழுங்கியுள்ளார். அது மூச்சுக்குழாய்க்குள் சென்றது எக்ஸ்ரேவில் தெரியவந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறுவனை, அவரது பெற்றோர் அனுமதித்தனர்.

திருச்சி: 3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி!
திருச்சி: நாக்கை இரண்டாக்கி டாட்டூ... ஸ்டூடியோவில் வைத்து ஆபரேஷன்... இன்ஸ்டா பிரபலம் கைது!

சிக்கலான இடத்தில் இருந்த திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் குழு சாதுர்யமாக அகற்றியது. தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com