சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகுராமன், துக்க நிகழ்ச்சிக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டு மீண்டும் சாத்தூர் திரும்பி வந்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் என தனது வாகன அனுமதி அட்டையை காண்பித்தும் அவரது வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் எம்.எல்.ஏ.விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.