எழிலகத்தில் விடிய விடிய சோதனை! ரூ.2.14 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர் வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பலமணி நேரம் நடந்த சோதனை இன்று காலை முடிவடைந்த நிலையில், உதவி செயற்பொறியாளர் தற்போது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். உதவி செயற்பொறியாளர் பாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எழிலகம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
எழிலகம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

மேலும், எழிலகம் வளாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீர் வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பைத் தடுக்கும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில்தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com