தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் அரங்கேறிய 'லாக்கப் டெத்'
தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் அரங்கேறிய 'லாக்கப் டெத்'fb

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் அரங்கேறிய 'லாக்கப் டெத்';கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்ட களத்தில் விஜய்!

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக் கேட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கருப்பு சட்டை அணிந்து விஜய் பங்கேற்று இருக்கிறார். இதுகுறித்த அடுத்தடுத்த தகவல்களை பார்க்கலாம்.

எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? ... ஆர்ப்பாட்ட களத்தில் விஜயின் பேச்சு

கருப்பு சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜய் தவெக தலைவர் விஜய், எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், முதல்வர் எதற்கு?... என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மேலும், இதில் பேசிய அவர், “ திருப்புவனம், மடப்புறம் அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர்; அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்கள் Sorry கூறினீர்கள். அது தவறில்லை. ஆனால், இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்கள். இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் கொலை சிபிஐக்கு மாற்றப்பட்டது அவமானம் என்றால் இன்று நீங்க உத்தரவிட்டதன் பெயர் என்னசார். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?

அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரிக்க, 'நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்' என்று தவெக வலுவாக கோரிக்கை வைத்திருப்பதால், பயத்தில் ஒன்றிய ஆட்சிக்குப் பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள்.

அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? CM பதவி எதுக்கு சார்? அதிகபட்சம் உங்களிடத்திலிருந்து வருவது , 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே... இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ Sorry மா மாடல் சர்காராக மாறிவிட்டது.

ஆட்சியை விட்டு போவதற்கு முன், நீங்க செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமா சட்டம் ஒழுங்கை நீங்களே சரிசெஞ்சாகணும். இல்லன்னா, மக்களோடு மக்களா நின்று உங்கள சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கு உண்டான போராட்டங்கள் அனைத்தும் எடுத்து நடத்தப்படும்". என்று தெரிவித்துள்ளார்.

அப்போது இருந்த போராட்ட குணம் இப்போது உங்களுக்கு எங்கே போனது  - ஸ்டாலினை நோக்கி ஆதவ் அர்ஜூனா கேள்வி

இக்கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “ நீங்கள் ஜெயராஜ் பென்னிஸ் மரண வழக்கில், மக்கள் முன்பு கடும் போராட்டம் நிகழ்த்தினீர்கள்.

அப்போதையை முதல்வர் அவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டபோது, தமிழ்நாடு காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினீர்கள். அப்போது இந்த போராட்ட குணம் உங்களுக்கு இப்போது எங்கே போனது.

எதிர்கட்சித்தலைவராக இருந்த போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது ஏன் அதை செய்யவில்லை. எங்கிருந்த இது தெரிந்தது என்றால், அஜித் குமார் மரணமடைந்த போது வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

அஜித்தின் அம்மாவிடம் சாரிமா என்று கூறினீர்கள். உங்கள் தேர்தல் நாடக அங்குதான் வெளிப்பட்டது. அது என்னவென்றால், மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து விசாரித்து உண்மையை வெளிக்கொணர்ந்து வந்தபோது சாரி கூறினீர்கள்.

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் அரங்கேறிய 'லாக்கப் டெத்'
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? ... விஜய்!

ஜெய்படத்தை பார்த்து அழுதேன் என்று கூறினீர்கள் . உண்மையை பார்த்து அழுவது உங்கள் வேலை இல்லையே. ” என்று தெரிவித்துள்ளார்.

கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்ட களத்தில் விஜய்! 

இந்நிலையில், சென்னை சிவானந்தா சாலையில் தவெக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் வருகை தந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், கருப்பு சட்டை அணிந்து 'சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற பதாகையை ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில், சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கடலூரை சேர்ந்த தவெக தொண்டர் செல்வகுமார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கடும் வெயில் நிலவி வரும் சூழலில் போராட்டம் நடைபெறும் இடத்தில் தவெகவினர் குழுமி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தலைமையில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரங்கேறிய காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில்,18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் விஜய் வழங்கினார்.

தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய விஜய், அவர்களுக்கு நியாயமும், தீர்ப்பும் பெற்றுத் தர வேண்டியது தனது கடமை என்றும், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றுத்தர தவெக முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மயிலாப்பூர் சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் பேரணி, ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும், பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தவெகவினர் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com