பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியதை கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்

பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியதை கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்
பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியதை கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்

தேனியில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதை தொடர்ந்து, அதற்கு நூதன முறையில் கேக்வெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் லாரி ஓட்டுநர் சங்கத்தினர்.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்றைய பெட்ரோல் விலை 104 ரூபாயை தொட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பிற பொருட்கள் அனைத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம்கண்டு வருகிறது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எதிர் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் போராடி வந்தாலும் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலயில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்கதையாகிவிட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்றைய தினம் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி 100 ரூபாய் 5 பைசாவாக விலை உயர்ந்தது. ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மன வேதனையை நூதனமாக கொண்டாடும் விதமாக, பெரியகுளம் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பாக கேக் வெட்டினர். இதன்மூலம் மத்திய அரசுக்கு தங்கள் வருத்ததை தெரிவிப்பதாக கூறிய அவர்கள், வெட்டிய கேக்கை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு வழங்கி தங்கள் வருத்ததை தெரிவித்தனர்.

டீசல் விலை உயர்வு குறித்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கூறியும், GST வரிவிதிப்புக்குள் கொண்டுவர கோரி பல்வேறு போராட்டன்களை நடத்தினோம். ஆனாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 100 ரூபாய்க்கு மேல் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள மன வேதனையை கேக் வெட்டி மகிழ்சியுடன் கொண்டாடியுள்ளோம். இதை கண்டாவது மத்திய அரசு பெட்ரோல், டீல்ச விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கை எடுபார்கள் என்று நம்புகிறோம்” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com