கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ. கோப்புப் படங்கள்
என்.ஐ.ஏ. கோப்புப் படங்கள்pt web

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் 20க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருமுறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களில் தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கும் 20 நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் உக்கடம், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைகளில் கிடைக்கும் ஆதாங்களின் அடிப்படையில் மேலும் சோதனை மேற்கொள்ளப்படும் இடங்களை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com