பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் pt desk

நாமக்கல்: காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூவருக்கு நேர்ந்த சோகம்!

பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் மாயமான நிலையில், மூவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த நகபாளையத்தைச் சேர்ந்தவர் வினித் விமல்ராஜ் (21), இவர் குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (21), ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சேக் பைசல் ரகுமான் (21) ஆகிய மூவரும் வினித் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் pt desk

இவர்கள் மூவரும் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதையடுத்து குளிக்கச் சென்ற 3 பேரும் மாலை வரை வீடு திரும்பாத நிலையில், வினித்தின் தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மூவரது உடைமைகள் ஆற்றின் கரையோரத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
ஈரோடு: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com