மீனவர்கள் மீது தாக்குதல்
மீனவர்கள் மீது தாக்குதல்pt desk

நாகை | நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, செல்போன உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்ற கடற்கொள்ளையர்கள்;;...
Published on

செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்

தமிழ்நாடு அரசு கடந்த 14-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலத்தை அறிவித்துள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த கபிலன் என்பவருடைய நாட்;டுப்படகில் செந்தில், ராதாகிருஷ்ணன், சாமுவேல், ஜெகநாதன், ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லையில் மீன்பிடிக்க நேற்றிரவு வலை விரித்திருந்தனர். அப்போது அங்கு அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் இலங்கை கடற்கொள்ளையார்கள் 3 பேர் வந்துள்ளனர் இதில், தமிழ் பேசும் கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள் கட்டை, கம்பு போன்ற ஆயுதங்களுடன் புதுப்பேட்டை மீனவர்களை தாக்கினர் இந்த தாக்குதலில் படகில் இருந்த நான்கு மீனவர்களும் காயம் அடைந்தனர்

மீனவர்கள் மீது தாக்குதல்
போஸ்டர் ஒட்டிய தன்னால்... உங்களாலும் சாதிக்க முடியும்; GBU வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்!

இதையடுத்து படகில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 50 கிலோ உயர் தர மீன்கள், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, இரண்டு செல்போனகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றனர். இதையடுத்து ;இன்று காலை காயமடைந்த மீனவர்கள் கோடிய்க்கரை கடற்கரைக்குத் திரும்பினர் இதைத் தொடர்ந்து காயமடைந்த 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும காவல்துறையினர்;, மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com