நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்காலத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக பதிவுத்துறை அதிகாரி கீதாவை தமிழக அரசு நியமித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்கம் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்காலத் தடையில்லை என தெரிவித்துவிட்டது.