தேனி : கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபரீத முடிவு; சோகத்தில் கிராமம்!

தேனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்கொலை செய்து கொண்ட தாய், தந்தை, மகன்
தற்கொலை செய்து கொண்ட தாய், தந்தை, மகன் PT WEB

செய்தியாளர் - சுரேஷ் குமார்

தேனி மாவட்டம், சின்னமனூர் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செவத்தி வீரன். இவருடைய மனைவி ஒச்சம்மாள். இவர்களுடைய மகன் ராஜேஷ். இவர்கள் மூவரும் கடன் தொல்லையால் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காலையில் நீண்ட நேரம் ஆகியும் செவத்திவீரனின் வீட்டுக்கதவு திறக்கப்படாத காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, அவர்கள், சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தாய், தந்தை, மகன்
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 பேரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com