காஞ்சி: பிறந்த சிறிது நேரத்தில் குழந்தை மரணம்.. தாயும் உடனடியாக உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய்- குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சத்யா
உயிரிழந்த சத்யா PT WEP

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள பெருநகர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா. இவர்களுக்குக் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சத்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

சாலை மறியல்
சாலை மறியல்

இந்தநிலையில், சத்யா பிரசவத்திற்காக மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவம் பார்த்த சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள், சத்யாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது எனவும் உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சத்யா
“சுத்திகிட்டே இருக்கோம்..” - கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம்!

இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும் - குழந்தையும் உயிரிழந்து விட்டதாகக் கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சத்யாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏறப்படாததால் தற்போது வரை அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

உயிரிழந்த சத்யா
"மோடி தாத்தா ஹிந்தி பள்ளிக்கூடம் கட்டி தாங்க" பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்த சிறுமி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com