“மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுக-க்கு உடன்பாடு இல்லை” - அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி

ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி.
அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதிபுதிய தலைமுறை

செய்தியாளர் - விக்னேஷ்முத்து

தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற 21-ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி சென்னை சிம்சன்‌ சந்திப்பில் இன்று காலை தொடங்கி நடைபெற்ற தொடர் சுடர் ஓட்டத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக தொடர் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக தொடர் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன்.

இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு 310 கிலோமீட்டர் வரை சேலத்துக்கு இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு. இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.

எந்த ஒரு இயக்கமும் தேர்தல் வருவதற்கு முன்பு மாநாடு நடத்துவார்கள். ஆனால் அதை தாய் கழகம்தான் நடத்தும். ஆனால் இந்த முறை இளைஞர் அணிக்கு நம் தலைவர் அந்த வாய்ப்பை தந்துள்ளார். இளைஞர் அணி மீது தலைவருக்கு அதிக நம்பிக்கை உள்ளது. நான் இளைஞரணி செயலாளராக 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன். ஒவ்வொரு தொகுதிக்கும் பத்தாயிரம் பேரை இளைஞர் அணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தலைவர் உத்தரவிட்டார்.

அமைச்சர் உதயநிதி
மாடுபிடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை...? அமைச்சர் உதயநிதி பதில்!

அதன்படி இளைஞர் அணியில் ஒட்டுமொத்தமாக 25 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். 4 லட்சம் பேருக்கு நிர்வாகிகள் பணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேர்காணல் செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பயிற்சி பாசறை கூட்டங்கள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இல்லம் தோறும் இளைஞரணி என்ற பெயரில் வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த மாநாட்டை நாம் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

இந்த மாநாட்டின் பெயரே மாநில உரிமை மீட்பு மாநாடு. கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அ.தி.மு.க. ஆட்சியில் நாம் முழுமையாக இழந்துள்ளோம். கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி
‘அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா...’ - காளையருக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி

குடும்பத்தோடு அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை. இனிமேலும் இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம்‌. 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம்‌. மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்.

உதயநிதி
உதயநிதிtwitter

பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ‘எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அக்கேள்விக்கு, “அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால்வலி வருகிறது” என விமர்சித்தார் அமைச்சர் உதயநிதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com