சென்னையில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னையில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சீரான மின்விநியோகம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

பெருமழை காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சாரம் துண்டிப்பு என்றும் மழைநீர் வடிந்த பிறகு மின்விநியோகம் சீராகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com