நேற்று உடனிருந்த மருத்துவ மாணவி, இன்று உயிரோடு இல்லை..! உயிரை குடித்த காய்ச்சல்.. பின்னணி என்ன?

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மாணவி, திடீரென உயிரிழந்த செய்தி சக மாணவிகளையும், உறவினர்களையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்துள்ளது.
student died
student diedfile image

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று, அதே கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக சளி தொந்தரவால் இவர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்த நிலையில், தான் பணியாற்றிய அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சிந்து. காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை அளித்தும், இன்று காலை மாணவியின் உயிர் பிரிந்துள்ளது.

student died
தமிழகத்தில் டெங்கு.. கேரளத்தில் நிபா.. அதிர்ச்சியில் மக்கள்!

சமீபமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெங்குவால் இறந்துவிட்டாரா என்று உறவினர்கள் அஞ்சிய நிலையில், மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி மாணவி சிந்துவை பரிசோதித்ததில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட சோதனைகளில் நெகட்டிவ் என்று வந்ததாகவும், டைபாய்டால் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

நேற்றுவரை உடன் இருந்த மாணவி இன்று உயிரோடு இல்லையே என்று சக பயிற்சி மாணவிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

student died
புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com