காவலர் மீது புகார்
காவலர் மீது புகார்pt desk

மதுரை | 'குயின் டிரேடிங்' பங்குச்சந்தையில் முதலீடு எனக் கூறி ரூ.24 கோடி மோசடி – காவலர் மீது புகார்

குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் எனக் கூறி 1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புதூர் காவல் நிலைய காவலர் மற்றும் அவரது மனைவி மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் தங்கராஜ் - பிரேமலதா தம்பதியர். புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ், ஞருநுநுே டிரேடிங் என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாகக் கூறி தங்கும் விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளனர். இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து முதலீடு பெற்றுள்ளனர்.

மேலும் மதுரை, கோயம்புத்தூர்ஈ சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களுடைய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள நிலையில், கடந்த 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில், பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறிய நிலையில், பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களது செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை.

காவலர் மீது புகார்
திருத்தணி | பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டு!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரையும் ஏமாற்றமடைந்து நிற்கிறோம் என முதலீட்டாளர்கள் தொவித்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

காவலர் மீது புகார்
”ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது” - தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலீட்டாளர்கள், ரமேஷ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால், அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் எனவே எங்களுடைய பணத்தை மீட்டுத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்நு கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com