மதுரை: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்... குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி!

மதுரையில் முன்னாள் ராணுவ அதிகாரி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமேஷ், விசாலினி
ரமேஷ், விசாலினிpt web

மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் (41). கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர். இவரது மனைவி பெயர் விசாலினி (36). இத்தம்பதிக்கு 12 வயதில் ரமிஷா ஜாஸ்பல் என்ற மகள் உள்ளார்.

ரமேஷ் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வீடு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து திருப்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

ரமேஷ், விசாலினி
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு சடலமாக கிடந்தனர். சடலங்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ், அவரது தோழி ஒருவருடன் இணைந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. தொழிலில் நஷ்டம் அடைந்ததோடு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு வகையில் டார்ச்சர் அனுபவிப்பதாக தங்கள் கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் அவர் தன் குடும்பத்தோடு இணைந்து இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com