மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 முதல் 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அரசுக்கு எதிராகவும், அப்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும் பேசியதாக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அரசாணையை ஏற்ற நீதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com