விஜயகாந்த் மறைவு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்முடன் பேசியபொழுது, "விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவர், ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலைஞர். சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட தலைவர். தமிழ்துறை உலகில் முக்கியமான கதாநாயகனாக இருந்தவர். குறிப்பாக அவரின் திரைப்படங்கள் தேசபக்தியை வெளிபடுத்தும், சமூக அக்கறைக்கொண்ட திரைப்படமாக இருக்கும். அவருக்கு சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பியவர்” என்று பேசியுள்ளார்.