\
முன்னாள் முதல்வராக இருந்தபோதும் கருணாநிதிக்கு கிடைத்த கவுரவம்

முன்னாள் முதல்வராக இருந்தபோதும் கருணாநிதிக்கு கிடைத்த கவுரவம்

முன்னாள் முதல்வராக இருந்தபோதும் கருணாநிதிக்கு கிடைத்த கவுரவம்
Published on

பதவியில் இருந்த போது மரணம் அடைந்த 3 முதலமைச்சர்கள் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கும் அந்த கவுரவம் கிடைத்துள்ளது.

1967ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர்களில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பதவியில் இருந்த போது உயிரிழந்தவர்கள். இவர்கள் மூன்று பேரின் உடல்களுமே மெரினா கடற்கரையில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஜானகி அம்மாள், கருணாநிதி ஆகியோர் முன்னாள் முதலமைச்சராக இருந்த போது உயிரிழந்துள்ளனர்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 3 முதலமைச்சர்களுடன் மெரினாவில் தற்போது கருணாநிதியும் இணைந்துள்ளார். இதை கருணாநிதிக்கு கிடைத்த கவுரவமாக திமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com